திட்டம்-2

  1. உறுப்பினர்கள் சந்தா தொகையை திட்டம் (II) இரண்டில் 11 மாதங்களும் தொடர்ச்சியாக தவணைத் தேதியில் ரொக்கமாகவோ அல்லது வங்கி பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தி வருதல் வேண்டும்.
  2. ஒவ்வொரு மாதமும் சந்தா தொகையை செலுத்தியபின் அதற்குரிய இரசீதை கம்பெனியின் அதிகாரம் பெற்ற நபரிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். இரசீது இல்லாமல் உறுப்பினர் பாஸ் புத்தகத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கணக்கில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  3. முதல் தவணையை செலுத்தி உறுப்பினராக சேர்ந்த தேதியிலிருந்து அடுத்துவரும் 30 நாட்களில் அடுத்த தவணைத் தொகையை செலுத்திவிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக தவணை தேதிக்குள்ளாக தவணைக் காலங்கள் (11 மாதங்கள்) முழுமையும் சந்தா செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே முழுமையான ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும்.
  4. உறுப்பினர்கள் தவணைத் தொகையை முழுமையாக செலுத்தியிருந்தாலும் தவணைத் தொகையை காலமாதத்துடனம் முறையின்றியும் கட்டப்படும் தவணைகளுக்கும் காலதாமதத்திற்கும் ஏற்றாற்போல் அத்திட்டத்திற்கு உரிய ஊக்கத்தொகை மற்றும் நகைகொள்முதலுக்கு உண்டான கூடுதல் ஊக்கத்தொகையிலும் பிடித்தம் செய்யப்படும். ஊக்கத்தொகை முழுமையாக கிடைக்காது.
  5. எங்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே நகைகொள்முதல் ஊக்கத்தொகை கிடைக்கும். தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களுக்கு கொள்முதல் ஊக்கத்தொகை கிடையாது.
  6. ஊறுப்பினர்கள் தேர்வு செய்யும் பொருட்களுக்கு ஏற்றவாறு அவற்றிற்குரிய சேதாரம் மற்றும் கூலி எனப்படும் கூடுதல் மதிப்பு (Value Addition) தொகை மற்றும் G.S.T. யுடன் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  7. தவணைக்காலம் முழுமையாக பணம் செலுத்தாமல் முன்னதாக விலகும் உறுப்பினர்களுக்கு எந்தவொரு வட்டி மற்றும் ஊக்கத்தொகையும் கிடைக்காது. அவர்கள் செலுத்திய தவணைத் தொகையில் நிர்வாக செலவீனங்களுக்காக (2%) இரண்டு சதவீதம் மற்றும் 3% G.S.T. பிடித்தம் செய்துகொண்டு மீதி தொகைக்கு மட்டுமே தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
  8. இத்திட்டங்களின் கீழ் உறுப்பினர்கள் ரொக்கமாக பணம் பெற இயலாது. நகைகளாக மட்டுமே திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
  9. எந்தவொரு முன்னறிவிப்புமின்றி கம்பெனியின் சட்டதிட்டங்களை மாற்றவோ நடைமுறைப்படுத்தவோ சேர்க்கவோ அல்லது நீக்கவோ கம்பெனிக்கு அனைத்து உரிமையும் உண்டு.